Search This Blog

Wednesday, October 17, 2012

தமிழ்ச் செவ்வியல் நூல்கள் - அறிமுகம்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றையும் தனித்தன்மைகளையும்  கொண்டவை பழந்தமிழ் நூல்கள். அதனாலேயே, தமிழ் இனத்தில் பண்பாடு, அரசியல், நாகரிகம், பழக்க-வழக்கம், தொலைநோக்குச் சிந்தனைகள் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் காரணிகளுள் முதன்மையானவையாகப் பழந்தமிழ் நூல்கள் திகழ்கின்றன.


பண்டைத் தமிழ் இலக்கியங்களுள், சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த காலத்தில் தோன்றிவை ‘சங்க இலக்கியங்கள் (மேல்கணக்கு நூல்கள்) என்றும், களப்பிரர் காலத்தில் தோன்றியவை ‘சங்கம் மருவிய கால இலக்கியங்கள் (கீழ்க்கணக்கு நூல்கள்) என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.


தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பிறகு 2007ஆம் ஆண்டு ‘செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மத்திய அரசு சென்னையில் நிறுவியது. கி.பி. 600க்கும் முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வை நிகழ்த்தும் வகையில் இது நிறுவப்பட்டது. இந்நிறுவனம், கி.பி.6ஆம் நூற்றாண்டுக்கு முந்திய சங்க இலக்கியங்கள், சங்க மருவிய கால இலக்கியங்கள், காப்பியங்கள் என 41 நூல்களை இனங்கண்டு ‘செவ்வியல் நூல்கள் எனப் பட்டியலிட்டுள்ளது.  இந்த 41 நூல்கள் குறித்த அறிமுகத்தையும், தனித்தன்மைகளையும், சிறப்புகள் சிலவற்றையும் இப்பகுதியில் தொடர்ந்து காண்போம்.

செவ்வியல் நூல்கள்:

                         1. தொல்காப்பியம்

              எட்டுத்தொகை நூல்கள்

                     2. நற்றிணை

                     3. குறுந்தொகை

                     4. ஐங்குறுநூறு

                     5. பதிற்றுப்பத்து

                     6. பரிபாடல்

                     7. கலித்தொகை

                     8. அகநானூறு

                     9. புறநானூறு

              பத்துப்பாட்டு

                     10. திருமுருகாற்றுப்படை

                     11. பொருநராற்றுப்படை

                     12. சிறுபாணாற்றுப்படை

                     13. பெரும்பாணாற்றுப்படை

                     14. முல்லைப்பாட்டு

                     15. மதுரைக்காஞ்சி

                     16. நெடுநல்வாடை

                     17. குறிஞ்சிப்பாட்டு

                     18. பட்டினப்பாலை

                     19. மலைபடுகடாம்

              பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

                     20. நாலடியார்

                     21. நான்மணிக்கடிகை

                     22. இன்னாநாற்பது

                     23. இனியவைநாற்பது

                     24. கார்நாற்பது

                     25. களவழிநாற்பது

                     26. ஐந்திணை ஐம்பது

                     27. திணைமொழி ஐம்பது

                     28. ஐந்திணை எழுபது

                     29. திணைமாலை நூற்றைம்பது

                     30. பழமொழி

31. சிறுபஞ்சமூலம்

32. திருக்குறள்

                     33. திரிகடுகம்

                     34. ஆசாரக்கோவை               

                     35. முதுமொழிக்காஞ்சி

                     36. ஏலாதி

                     37. கைந்நிலை


              காப்பியங்கள்

                     38. சிலப்பதிகாரம்

                     39. மணிமேகலை

                     40. முத்தொள்ளாயிரம்

                     41. இறையனார் களவியல் உரை.







தொகுப்பு :-

சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
மயிலம் - 604 304.
விழுப்புரம் மாவட்டம்,  
தமிழ்நாடு - இந்தியா.

No comments:

Post a Comment