Search This Blog

Friday, August 6, 2021

தமிழ் இலக்கிய வினா - விடைகள்

அகர வரிசையில் வெளியிடப்பெற்றது

செ . சத்யா ,

முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர் , 

(பதிவு எண் : Ph.D./2018/312/TAM)

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை  மற்றும்

அறிவியல் கல்லூரி, மைலம் - 604 304.

திண்டிவனம் வட்டம் - விழுப்புரம் மாவட்டம்.


1. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12

2. அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு

3. அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை

4. அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும்  திணைப்பாடல்கள்– நெய்தல்திணை

5. அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும்  திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை

6. அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும்  திணைப்பாடல்கள் – முல்லைத்திணை

7. அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும்  திணைப்பாடல்கள் – மருதத்திணை

8. அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்

9. அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்

10. அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்

11. அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி  நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை

12. அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90

13. அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை

14. அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை

15. அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர்  – வே.இராசகோபால்

16. அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை

17. அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை

18. அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்

19. அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்

20. அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

21. அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)

22. அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்

23. அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்

24. அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன் 

25. அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி

26. அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் -  தழிஞ்சி

27. அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து

28. அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்

29. அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்

30. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் -  திருக்குறள்

31. அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்

32. அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா

33. அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து

34. அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் -  ஆலாபனை - 1999

35. அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்

36. அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்

37. அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் -   மறைமலையடிகள்

38. அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி

39. அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்

40. அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி

41. அமிர்த சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி

42. அரக்கு மாளிகை  நாவலாசிரியர் –  லட்சுமி

43. அரசனால்செய்யப்படும்சிறப்பு - மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,

44. அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலை – வாகைத் திணை

45. அரசனுக்கு அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉ –பாடாண்

46. அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் – நின்ற சீர் நெடுமாறன்

47. அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர்

48. அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்

49. அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் – திருப்புகழ்

50. அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர்

51. அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்

52. அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர்

53. அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு

54. அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர்

55. அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல்       

56. அறநெறிச்சாரம் பாடியவர்  - முனைப்பாடியார்

57. அற்புதத் திருவந்தாதி பாடியவர் –  காரைக்காலம்மையார்

58. அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர் – கல்கி

59. அறுவகை இலக்கண ஆசிரியர் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள

60. அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன்

61. அன்னி மிஞிலி  காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன்

62. அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம்

63. ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்

64. ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர்

65. ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102

66. ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன்

67. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்

68. ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு

69. ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி

70. ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர்

71. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.

72. ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி

73. ஆயிடைப்பிரிவு  -பரத்தையிற்பிரிவு

74. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை

75. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு     

76. ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் -  ஜெகசிற்பியன்

77. ஆறாம் இலக்கணம் – புலமை இலக்கனம்

78. ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார்

79. ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் –திருவாவடுதுறை மடம்

80. இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை

81. இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல்

82. இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி

83. இடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 3700

84. இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 59

85. இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்

86. இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்

87. இடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  - 3700

88. இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை

89. இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து

90. இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர் கண்டுபிடிப்பு

91. இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச நந்தினி ( 1865)

92. இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்

93. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் – இந்திரகாளியர்

94. இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர் அலியார்

95. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு

96. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம்

97. இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

98. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470

99. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப் புலவர்

100.இரட்சணிய குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

101.  இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா

102.  இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்

103.  இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்

104.  இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்

105.  இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்

106.  இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்

107.  இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்

108.  இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா

109.  இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்

110.  இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்

111.  இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை

112.  இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு

113.  இருபத்திரண்டு  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்

114.  இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து

115.  இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்

116.  இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி

117.  இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்

118.  இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்

119.  இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்

120.  இலக்கிய உதயம் நூலாசிரியர்    - எஸ்.வையாபுரிப் பிள்ளை

121.  இலக்கியம் இதழாசிரியர் - சுரதா

122.  இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்

123.  இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை

124.  இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்

125.  இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி

126.  இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்

127.  இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை

128.  இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்

129.  இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா

130.  இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை

131.  ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்

132.  ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்

133.  ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்

134.  உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை

135.  உட்கார்ந்து எதிரூன்றல் -  காஞ்சி

136.  உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்

137.  உண்டாட்டு - கள்குடித்தல்

138.  உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

139.  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு

140.  உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்

141.  உமைபாகர்  பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்

142.  உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்

143.  உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்

144.  உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்

145.  உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்

146.  உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்

147.  உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்

148.  உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்

149.  உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு

150.  உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்

151.  உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை

152.  உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்

153.  உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்

154.  உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி

155.  உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா

156.  உலகின் முதல் நாவல் – பாமெலா

157.  உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்

158.  உவமைக் கவிஞர்                    -சுரதா

159.  உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது  - கந்தழி

160.  உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்

161.  உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்

162.  உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்

163.  உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்

164.  ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா

165.  ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்

166.  ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை

167.  ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா

168.  ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்

169.  எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்

170.  எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களு

170.  எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்

171.  எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress

172.  எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து

173.  எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்

174.  எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3

175.  எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை,   அகநானூறு,கலித்தொகை

176.  எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்

177.  எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து

178.  எட்டுத்தொகைப்பாடல்களின் -  சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்

179.  எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை

180.  எதிர் நீச்சல்  நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்

181.  எயில் காத்தல் – நொச்சி

182.  எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு

183.  எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்

184.   என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா

185.  ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்

186.  ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க

187.  ஏழகம்  - ஆட்டுக்கிடாய்

188.  ஏழைபடும் பாடு  நாவலாசிரியர்  - சுத்தானந்த பாரதியார்

189.  ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை

190.  ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு

191.  ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை  இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு

192.  ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு

193.  ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்

194.  ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்

195.  ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு

196.  ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்

197.  ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு

198.  ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்

199.  ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்

200.  ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்

201.  ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்

202.  ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469

203.  ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா

204.  ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்

205.  ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

206.  ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6

207.  ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா

208.  ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை

209.  ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்

210.  ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்

211.  ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்

212.  ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்

213.  ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .

214.  ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்

215.  ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்

216.  ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா

217.  ஒரு நாள்  என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்

218.  ஒரு புளியமரத்தின் கதை  நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி

219.  ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா

220.  ஒருபிடி சோறு -  சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்

221.  ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி

222.  ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை

223.  ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி

224.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்

225.  ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு

226.  ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்

227.  ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை

228.  ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா

229.  ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ

230.  ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி

231.  கங்கை மைந்தன் – தருமன்

232.  கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு

233.  கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்

234.  கடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 449

235.  கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 49

236.  கடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  - 1850

237.  கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை

238.  கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம்

239.  கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா

240.  கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா

241.  கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா

242.  கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்

243.  கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு

244.  கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா

245.  கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் -  இராமவதாரம்

246.  கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்

247.  கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்

248.  கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்

249.  கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்

250.  கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை

251.  கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்

252.  கரந்தை - ஆநிரை மீட்டல்

253.  கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ

254.  கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்

255.  கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்

256.  கருப்பு மலர்கள் ஆசிரியர் -  நா.காமராசன்

257.  கல்கியின் முதல் நாவல் - விமலா

258.  கலம்பக உறுப்புகள்  - 18

259.  கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்

260.  கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்

261.  கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்

262.  கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்

263.  கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்

264.  கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்

265.  கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா

266.  கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா

267.  கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்

268.  கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150

269.  கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா

270.  கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்

271.  கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்

272.  கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை

273.  கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை

274.  கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்

275.  கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை

276.  கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்

277.  கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

278.  கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி

279.  கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்

280.  கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல்  மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா

281.  கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல்  மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் - ரூபாயாத் –பாரசீக மொழி

282.  கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்

283.  கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்

284.  கவிராஜன் கதையாசிரியர்    - வைரமுத்து

285.  கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை

286.  கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன்

287.  கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி                   

288.  கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்

289.  கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்

290.  கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்

291.  காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்

292.  காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்

293.  காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்

294.  காந்தியக் கவிஞர்                     -  நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை                   

295.  காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்

296.  காரி  (கலுழ்ம்)  – காரிக்குருவி

297.  காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை

298.  காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்

299.  காளக்கவி எனப்படுபவர் - காளமேகம்                                                   

300.  காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்

301.  கிரவுஞ்சம் என்பது – பறவை

302.  கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ  1750

303.  கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி

304.  கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்

305.  குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்

306.  குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்

307.  குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72

308.  குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி

309.  குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்

310.  குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்

311.  குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்

312.  குறிஞ்சிக் கிழவன் - முருகன்                                                                           

313.  குறிஞ்சித் தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி                                           

314.  குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்

315.  குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்

316.  குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்

317.  குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400

318.  குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்

319.  குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309

320.  குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம்  பெறும் புலவர்கள் – 18 பேர்

321.  குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள் -குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்

322.  குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்

323.  குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்

324.  குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440

325.  குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ

326.  குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205

327.  கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர்  - அடியார்க்கு நல்லார்

328.  கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்

329.  கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்

330.  கைவல்ய நவ நீதம் எழுதியவர்            - தாண்டவராயர்

331.  கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் –  இறையனார்

332.  கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை

333.  கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்

334.  கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு

335.  கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்

336.  கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி

337.  சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்

338.  சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்

339.  சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்

340.  சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை

341.  சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368

342.  சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.

343.  சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்

344.  சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்

345.  சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்

346.  சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார்

347.  சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர்

348.  சங்கப்பாடல்  இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30

349.  சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்

350.  சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று

351.  சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்

352.  சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்

353.  சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் -  நம்மாழ்வார்         

354.  சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் - செய்குத் தம்பிப் பாவலர்

355.  சதுரகராதி ஆசிரியர் -  வீரமாமுனிவர்

356.  சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர் தமிழழகன்

357.  சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா

358.  சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர நந்தி சங்கம்

359.  சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914

360.  சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்

361.  சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்

362.  சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் -  மாயூரம் வேத நாயகர்

363.  சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்

364.  சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்

365.  சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்

366.  சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்

367.  சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்

368.  சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி

369.  சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்

370.  சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்

371.  சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் - படிக்காசுப் புலவர்

372.  சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை நகர்

373.  சிவப்பு ரிக்ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்

374.  சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64

375.  சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்

376.  சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்

377.  சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்

378.  சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்

379.  சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை

380.  சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்

381.  சிறுமுதுக்குறைவி – கண்ணகி

382.  சின்ன சங்கரன் கதையாசிரியர்  - பாரதியார்

383.  சின்னூல் எனப்படுவது  -  நேமி நாதம்

384.  சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு  - 1705

385.  சீகாழிக்கோவை எழுதியவர்    அருணாசலக் கவிராயர்

386.  சீதக்காதி என அழைக்கப்படுபவர் - செய்யது காதர் மரைக்காயர்

387.  சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க

388.  சீறாப்புராணம் ஆசிரியர்  -  உமறுப்புலவர்

389.  சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975

390.  சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர்    மு.கதிரேசன் செட்டியார்

391.  சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்

392.  சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்

393.  சுமைதாங்கி ஆசிரியர் –  நா.பாண்டுரங்கன்

394.  சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி

395.  சுரதாவின் இயற்பெயர்  -  இராசகோபாலன்

396.  சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்

397.  சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்

398.  சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்

399.  சூடாமணி நிகண்டின் ஆசிரியர்  - மண்டல புருடர்

400.  செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் - மறக்கள வழி- வாகைத்திணை

401.  செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு  - 1903

402.  செந்தாமரை நாவல் ஆசிரியர்  -  மு.வரதராசன்

403.  செம்பியன் தேவி நாவலாசிரியர்    -  கோவி.மணிசேகரன்

404.  செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்

405.  செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு

406.  சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்

407.  சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்

408.  சேயோன்  - முருகன்

409.  சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து

410.  சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து

411.  சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்

412.  சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்

413.  சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை

414.  சைவசமயக் குரவர்கள்  - நால்வர்

415.  சைவத் திறவுகோல்  நூலாசிரியர் – திரு.வி.க

416.  சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க

417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும

417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை

418.  சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்

419.  சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள

420.  சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை

421.  சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்

422.  சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்

423.  சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்

424.  சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா

425.  ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்

426.  ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி

427.  ஞானக் குறள் ஆசிரியர்  -  ஔவையார்

428.  ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்

429.  ஞானவெண்பாப் புலிப்பாவலர்     அப்துல் காதீர்

430.  டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா

431.  டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை

432.  தக்கயாகப் பரணி ஆசிரியர்    ஒட்டக்கூத்தர்

433.  தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர்  -   சோமசுந்தரபாரதியார்

434.  தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்

435.  தண்டி ஆசிரியர்  -  தண்டி

436.  தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை    35 அணிகள்

437.  தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்

438.  தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்

439.  தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்

440.  தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்

441.  தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி

442.  தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்

443.  தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்

444.  தம் மனத்து எழுதிப்  படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்

445.  தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி

446.  தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்

447.  தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்

448.  தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்

449.  தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா

450.  தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை

451.  தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு

452.  தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்

453.  தமிழ் மொழியின் உப நிடதம் -  தாயுமானவர் திருப்புகழ் திரட்டு

454.  தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி

455.  தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்

456.  தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்

457.  தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு

458.  தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி

459.  தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி

460.  தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு

461.  தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்

462.  தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை

463.  தமிழ்த்தாத்தா - உ.வே.சா

464.  தமிழ்த்தென்றல் -  திரு.வி.க

465.  தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்

466.  தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103

467.  தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்

468.  தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்

469.  தமிழ்மொழி - பின்னொட்டு மொழி

470.  தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு

471.  தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்

472.  தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்

473.  தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்

474.  தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா

475.  தமிழில் பாரதம் பாடியவர்  – வில்லிபுத்தூரார்

476.  தமிழில் முதல் சதக இலக்கியம்    திருச்சதகம்

477.  தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை

478.  தமிழின் முதல் நாவல் -  பிரதாப முதலியார் சரித்திரம் -  மாயூரம் வேத நாயகர்

479.  தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை -  பாரதிதாசன்

480.  தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு

481.  தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் -  புறநானூறு 366

482.  தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு

483.  தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு

484.  தலைமுறைகள் நாவலாசிரியர் –  நீல .பத்மநாபன்

485.  தலைவன் பிரிந்த நாளை  ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை

486.  தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்

488.  தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு

489.  தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்  - த.நா.குமாரசாமி

490.  தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்

491.  தாமரைத் தடாகம் நூலாசிரியர்  -  கார்டுவெல் ஐயர்

492.  தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை

493.  தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர்  -  வள்ளலார்

494.  தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை

495.  தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி

496.  தானைமறம் – தும்பை

497.  தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர்    நா.காமராசன்

498.  தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்

499.  திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்

500.  திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார்

501.  திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்

502.  திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470

503.  திரமிள சங்கம் தோற்றுவித்தவர்  - வச்சிர நந்தி

504.  திரமிளம்  என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்

505.  திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை

506.  திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு

507.  திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள்  -   பாலி,பிராகிருத மொழிகள்,

508.  திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்

509.  திராவிட வேதம் - திருவாய் மொழி

510.  திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்

511.  திரிகடுகம்  -  சுக்கு,மிளகு,திப்பிலி

512.  திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்

513.  திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி

514.  திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்

515.  திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்

516.  திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்

517.  திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்

518.  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி

519.  திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்

520.  திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்

521.  திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்

522.  திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்

523.  திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்

524.  திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் -  திருச்செந்தூர்

525.  திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி

526.  திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் -  பெ.சுந்தரம் பிள்ளை

527.  திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து

528.  திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்  -  நம்பியாண்டார் நம்பி

529.  திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா

530.  திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்

531.  திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்

532.  திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்

533.  திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்

534.  திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் -  டாக்டர் கார்டுவெல்

535.  திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்

536.  திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720

537.  திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்

538.  திருப்புகழ் பாடியவர்  - அருணகிரி நாதர்

539.  திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு

540.  திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்

541.  திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000

542.  திருமழிசைஆழ்வார் இயற்பெயர்      - பக்திசாரர்

543.  திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி

544.  திருமுருகாற்றுப்படை ஆசிரியர்  – நக்கீரர்

545.  திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)

546.  திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்

547.  திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது

548.  திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்

549.  திருவாசகப் பாடல் எண்ணிக்கை        - 656

550.  திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்

551.  திருவாவடுதுறை  ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்

552.  திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்

553.  திருவெங்கை உலா ஆசிரியர் -  சிவப்பிரகாச சுவாமிகள்

554.  திருவேரகம் –  சுவாமிமலை

555.  திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்

556.  தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு

557.  தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்

558.  திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் –  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

559.  தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்

560.  துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்

561.  தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு

562.  தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி

563.  தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி

564.  தென்னவன் பிரமராயனெனும்

565.  தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி

566.  தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876

567.  தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை

568.  தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்

569.  தேரோட்டியின் மகன்   நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா

570.  தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை

571.  தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்

572.  தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி

573.  தேன் மழைக் கவிதைத்தொகுப்பு       - சுரதா

574.  தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்

575.  தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் -   தமிழி

576.  தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்

577.  தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்

578.  தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்

579.  தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27

580.  தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்

581.  பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்

582.  தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்-சி.புன்னைவன நாத முதலியார் – 1922

583.  தொல்காப்பிய மெய்ப்பாடுகள் –  8

584.  தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்

585.  தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்

586.  தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்

587.  தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை பொருளதிகாரம்  இறுதி நான்கு இயல்கள்-

588.  தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை- அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்

589.  தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை

590.  தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்

591.  தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்

592.  தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்

593.  தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33

594.  தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள்         (பேரெண்கள்)

595.  தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்--க.வெள்ளைவாரனார்

596.  தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும்  கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது  – கண்கள்

597.  தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3

598.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20

599.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20

600.  தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார், வெள்ளியார்

 

No comments:

Post a Comment