Search This Blog

Tuesday, June 14, 2016

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடை - 1

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடை - 1

1.தொடக்க காலத் தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

தமிழி

2.மதுரைக்காஞ்சி பாடியவர் யார்?

மாங்குடிமருதனார்

3.தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது?

திருக்கைலாய ஞான உலா

4.திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்?

டாக்டர் கால்டுவெல்

5.நம்பியகப்பொருள் என்ற நூல் யாரால் எழுதப் பெற்றது ?

நாற்கவிராசநம்பி

6.ஓவச்செய்தி என்ற நூலை எழுதியவர்?

மு.வரதராசன்

7.சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் யார்?

படிக்காசுப்புலவர்

8.காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன?

வரதர்

9.நறுந்தொகை எனஅழைக்கப்பெறும் நூல் எது?

வெற்றிவெட்கை

10.மறைமலையடிகளின் இயற்பெயர் என்ன?

வேதாசலம்

11.பத்துக்கம்பன் என அழைக்கப்படுபவர் யார்?

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை

12.பாண்டி நன்னாடுடைத்து நல்லதமிழ் என்று பாடியவர் யார்?

ஒளவையார்

13.ஒன்றேகுலம்; ஒருவனே தேவன் என்று பாடியவர் யார்?

திருமூலர்

14.பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்டபெயர் என்ன?

திருத்தொண்டர்புராணம்

15.புறப்பாட்டு எனப்பெயர் பெறும் நூல் எது?

புறநானூறு

16.குறிஞ்சித்தேன் என்ற நாவலின் ஆசிரியர் யார்?

ராஜம் கிருஷ்ணன்

17.காய்ச்சீர் எந்தப் பாவிற்கு உரியது?

வெண்பாவிற்கு உரியது

18.மங்கையர்க்கரசியின் காதல் யார் எழுதிய சிறுகதை?

.வே.சு.ஐயர்

19 .பாலங்கள் யார் எழுதிய நாவல்?

சிவசங்கரி

20.கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச்சிரியாரோ என்று பாடியவர் யார்?

பாரதியார்

21.திருமுருகாற்றுப்படை ஆசிரியர் யார்?

நக்கீர்

22. முதற்சங்கம் இருந்த இடம் எது?

தென்மதுரை

23.உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தார் என்று கூறும் நூல் எது?

புறநானூறு

24.நாச்சியார் திருமொழி? யாரால் பாடப் பெற்றது?

ஆண்டாள்

25.ஐந்தி ஐம்பது ஆசிரியர் யார்?

மாறன் பொறையனார்.




தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
தமிழ் ஆசிரியை,                                                                                       சோலார் மெட்ரிக் பள்ளி,                                                                   
ரோஷனை,                                                                                         
திண்டிவனம் - 604 001.                                                                   
விழுப்புரம் மாவட்டம்,  தமிழ்நாடு - இந்தியா.





No comments:

Post a Comment